Friday, March 30, 2007

என் வீட்டுப் பூக்கள்

அழகுக்கின்னொரு பெயர் பூவா?
மனவமைதிக்கரு மருந்து பூவா?

நிறங்களின் வித்தை பூவா?
மனங்களின் விம்பம் பூவா?

வண்டுக்கு மதுச்சாலை பூவா?
பெண்டுக்குப் பூச்சூட்டப் பூவா?

இயற்கையின் ஓவியம் பூவா?
இயற்கையின் காவியம் பூவா?

அழகே பூவா?
பூவே அழகா?


என்று மயங்க வைக்கும் பூக்களின் படங்கள் சில.

Monday, March 26, 2007

மரம் பற்றியொரு பாடல்

கீழேயிருக்கும் இணைப்பில் மரம் என்ற சொல்லை எப்படியெல்லாம் பாவித்துக் கவி புனைந்தார் நம் முன்னோர் என்று பாருங்கள். இதை திரட்டித் தருபவர் அகத்தியர் குழுவை நடாத்தும் தமிழறிஞர் மருத்துவர் ஜெயபாரதி.
வாழ்க அவர் பணி.

http://www.visvacomplex.com/Maramadhu_MaraththilERi___.html

Tuesday, March 20, 2007

பீத்தல்

இன்று மதனின் மாறாட்டத்தைச் சாடி எழுதியிருந்த பதிலடிக்கு ( பார்க்க http://varalaaru-ezine.blogspot.com/2007/03/blog-post.html ) ஒரு பின்னூட்டம் இடும்பொழுது தானாக வந்து விழுந்தது "பீத்தல்" என்ற சொல். இது ஈழத்தில் பாவனையில் இருக்கும் சொல் தான். தமிழக மக்களும் இதைப் பாவிப்பதைக் காண்கிறேன். இந்தச் சொல்லில் இரு பொருள்கள் இருப்பது உடனே உறைக்கிறது.

1. பீத்தல்: ஈழத்தில் ஓட்டை அல்லது துவாரம் என்ற பொருள் படப் பாவிக்கப் படுகிறது. பீத்தல்ப் பேணி, பீத்தல் சட்டை என்று சொல்லப்படும்.

2. பீத்தல்: பிதற்றல் என்ற சொல்லின் மருவிய வடிவமாகத் தான் தமிழகத்தில் அறியப் படுகிறது என்று எண்ணுகிறேன். ஈழத்தில் இப்படிப்பட்ட பாவனையில்லை என்பது என் விளக்கம். "மதனின் பீத்தல் தெரிகிறது" என்று சொல்லும் போதும், மதன் பிதற்றுவது தெரிகிறது என்றல்லாமல், மதனில் (அல்லது மதனின் அறிவில்) இருக்கும் ஓட்டை தெரிகிறது என்பது தான் விளக்கம்.

அன்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?