Wednesday, May 27, 2009

விஜய ராஜேந்தரின் உருக்கமான பாடல்

தமிழகத்தின் 75% மக்களுக்கு ஈழத் தமிழரின் வரலாறும் வாழ்வும் பற்றிய விபரம் மிகக் குறைந்த அளவிலேயே தெரிந்திருக்கிறது. இந்தப் பாடல் மூலமாக அதி குறைந்தது அண்மைய இன அழிப்பு யுத்தத்தைப் பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டும். பொறுப்பான தமிழக ஊடகங்கள் அந்த வரலாற்றைத் தமிழ் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ராஜேந்தருக்கு நன்றி.

Monday, May 18, 2009

பேரிடி தான் வீழ்ந்ததோ

மே 18, 2009 இன் பேரிடி:

பேரிடி தான் வீழ்ந்ததோ
பெருந் துன்பஞ் சூழ்ந்ததோ
சூதர்கள் சூழ்ச்சிகளால்
சுய வுரிமை செத்ததோ

எலி வீடே யானாலும்
தனி வீடே யாமென்னும்
தமிழீழ மண் ணிங்கே
குருதியிலே முழுகியதோ
தன்னிறைமை தன்னையின்று

மனித நேயம் பேசிக் கொண்டு
மனித நேயம் சாகடித்த
மனித ரல்லா நாடரங்கில்
மனித மேமாண் டதின்று

பாண்டவர் படாத பாடா
யூதர்கள் படாத கேடா
காதகர்கள் காரியங்கள்
கவிழ்ந்து விழுங் காலம் வரும்

மாண்ட தொகை மாந்தருயிர்
மீண்டும் எழுந்தே யுயர்
மானமிகு மண்ணில் வர
மாதவம் நாம் செய்திடுவோம்
மறவர்களைச் செதிக்கிடுவோம்