Saturday, December 04, 2010

ஆயிரத்தில் இரு வார்த்தைகள்

"எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ராஜ மரியாதையோடு வந்து போவதற்கு பிரிட்டன் என்ன... ஆறரை கோடி மறத் தமிழர்கள் வாழும் தமிழ்நாடா?!"  - ஆயிரத்தில் ஒரு வார்த்தை

இது யூனியர் விகடனில் வந்திருக்கும் ஒரு செய்தியின் கடைசி வரி. எழுதியவருக்கு பாராட்டுகள். அற்புதமான வரிகள். செய்தி கீழே.
லண்டனில் கிளம்பிய ஓயாத அலைகள்..

இந்த ஆறரைக் கோடியில் சில மக்கள் கோடியிற் சிலர் போல் இங்கே செயற் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்.

தங்களிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்ட போலீசாரைப் பார்த்து, "உங்களுக்கு உணர்வே இல்லையா... யாருக்காக யாரை விரட்டுகிறீர்கள்...?" என்றனர் கோபத்துடன்.

-  ஆயிரத்தில் ஒரு வார்த்தை
செய்தி கீழே.
கோவையில் தமிழ் உணர்வாளர்கள் ஆவேசம்

Friday, January 29, 2010

கவர்ந்து போனாரே

காசு பணம் தேடிச் சென்றோம்
கோடி சுகம் நாடிச் சென்றோம்
ஓடி ஒளிந்தே பறந்தோம்
தாயகத்தையே துறந்தோம்


பட்டழிந்தோம் கெட்டழிந்தோம்
பட்டி தொட்டி எங்கும் சென்றோம்
கட்டுக் காவல் கலைந்த நாட்டில்
தட்டி பிரித்தே நுழைந்தார்


காடு பறி போனதண்ணே - சுடு
காடும் பறி போனதண்ணே
வீடு பறி போனதண்ணே -அட
நாடே பறி போனதண்ணே


ஏர் உழுத ஈர நிலம்
ஏழை மக்கள் பாச நிலம்
கார் சூழ்ந்த கானகங்கள்
வேரோடே போனதண்ணே


மிச்ச சொச்ச சொந்தமெல்லாம்
பச்சைப் புழுவாய்த் துடித்தார்
பட்டி கட்டிக் கமஞ் செய்தார்
பட்டிக்குள் அடை பட்டார்


குஞ்சு குரால் பிஞ்செல்லாம்
பஞ்சையாய்ப் போனதண்ணே
கஞ்சிக்கே காவடியாம்
வஞ்சிக்கப் பட்டோமண்ணே


வஞ்சகர்கள் காலமெல்லாம்
பஞ்சாய்ப் பறக்குமண்ணே
பொன்விளையும் புஞ்சை எல்லாம்
வந்தமருங் கையிலோர் நாள்

Tuesday, January 19, 2010

முதற் கவிதை

வருவேன் ஐந்து மணிக்கு
என்று சொன்னாய் எனக்கு
வராத தேனோ அதற்கு
எதற்கு என்மேல் பிணக்கு

ஐந்தோ ஆறாகித் தொடர
கண்ணோர ஆறும் பெருக
எங்கே இருக்கிறாய் நீ
இங்கே இறக்கிறேன் நான்

சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை
சொன்னதைச் செய்யாது ஆண்பிள்ளை
வந்தினிச் சொல்லும் பல பொய்யை
வரா திருந்தாலும் பெருங் கவலை

Friday, January 08, 2010

இராச இராச சோழன்

எந்தையரை மறந்து
வந்தவரைப் போற்றி
மொந்தை மதுவுண்டு 
மந்தைகளாய் வாழாமல்

செந்தமிழன் பேரரசன்
இராச இராச சோழ மன்னன்
பெருமை கூறும் காணொளியில
கண்டறிவோம் நம் பெருமை

Video 1
Video 2
Video 3
Video 4
Video 5
Video 6

Thursday, January 07, 2010

கனவா காவியமா

 கனவா காவியமா

கண் முன்னே விரிந்த தேசம்
கனவா கண்களே - புதிய

கரிகாலன் ஆண்ட தேசம்
கனவல்லக் கண்களே - சோழப்

புலிக் கொடிகள் பறந்த தேசம்
கனவா கண்களே - வீரப்

புலிப் படைகள் கண்ட தேசம்
கனவல்லக் கண்களே

காந்தி கண்ட கனவுத் தேசம்
கனவே கண்களே - அக்

கனவை நனவாக்கும் ஈழம்
கனவல்லக் கண்களே - இதைப்

பார்த்துப் பூரித்த தெல்லாம்
கனவா கண்களே - பொறா

மனங் கொண்டோர் சூழ்ச்சியெல்லாம்
கனவல்லக் கண்களே - அற

வழி பிறழ்ந்து அழித்தவர்கள்
கனவா கண்களே - அன்பு

ஈழத்தை உடைத்தவர்கள்
கனவல்லக் கண்களே - நம்

விண்ணுயர்ந்த எழுச்சி எல்லாம்
கனவா கண்களே - எம்

கண் முன்னே கவிழ்ந்ததுவுங்
கனவல்லக் கண்களே

பெருங் காவியமே தோன்றியதும்
கனவா கண்களே

மறு சோழமாகி நின்ற ஈழம்
கனவல்லக் கண்களே

புறநானூறு புகட்டா வீரம்
கனவா கண்களே

புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே