காசு பணம் தேடிச் சென்றோம்
கோடி சுகம் நாடிச் சென்றோம்
ஓடி ஒளிந்தே பறந்தோம்
தாயகத்தையே துறந்தோம்
பட்டழிந்தோம் கெட்டழிந்தோம்
பட்டி தொட்டி எங்கும் சென்றோம்
கட்டுக் காவல் கலைந்த நாட்டில்
தட்டி பிரித்தே நுழைந்தார்
காடு பறி போனதண்ணே - சுடு
காடும் பறி போனதண்ணே
வீடு பறி போனதண்ணே -அட
நாடே பறி போனதண்ணே
ஏர் உழுத ஈர நிலம்
ஏழை மக்கள் பாச நிலம்
கார் சூழ்ந்த கானகங்கள்
வேரோடே போனதண்ணே
மிச்ச சொச்ச சொந்தமெல்லாம்
பச்சைப் புழுவாய்த் துடித்தார்
பட்டி கட்டிக் கமஞ் செய்தார்
பட்டிக்குள் அடை பட்டார்
குஞ்சு குரால் பிஞ்செல்லாம்
பஞ்சையாய்ப் போனதண்ணே
கஞ்சிக்கே காவடியாம்
வஞ்சிக்கப் பட்டோமண்ணே
வஞ்சகர்கள் காலமெல்லாம்
பஞ்சாய்ப் பறக்குமண்ணே
பொன்விளையும் புஞ்சை எல்லாம்
வந்தமருங் கையிலோர் நாள்
Friday, January 29, 2010
Tuesday, January 19, 2010
முதற் கவிதை
வருவேன் ஐந்து மணிக்கு
என்று சொன்னாய் எனக்கு
வராத தேனோ அதற்கு
எதற்கு என்மேல் பிணக்கு
ஐந்தோ ஆறாகித் தொடர
கண்ணோர ஆறும் பெருக
எங்கே இருக்கிறாய் நீ
இங்கே இறக்கிறேன் நான்
சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை
சொன்னதைச் செய்யாது ஆண்பிள்ளை
வந்தினிச் சொல்லும் பல பொய்யை
வரா திருந்தாலும் பெருங் கவலை
என்று சொன்னாய் எனக்கு
வராத தேனோ அதற்கு
எதற்கு என்மேல் பிணக்கு
ஐந்தோ ஆறாகித் தொடர
கண்ணோர ஆறும் பெருக
எங்கே இருக்கிறாய் நீ
இங்கே இறக்கிறேன் நான்
சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை
சொன்னதைச் செய்யாது ஆண்பிள்ளை
வந்தினிச் சொல்லும் பல பொய்யை
வரா திருந்தாலும் பெருங் கவலை
Friday, January 08, 2010
இராச இராச சோழன்
எந்தையரை மறந்து
வந்தவரைப் போற்றி
மொந்தை மதுவுண்டு
மந்தைகளாய் வாழாமல்
செந்தமிழன் பேரரசன்
இராச இராச சோழ மன்னன்
பெருமை கூறும் காணொளியில
கண்டறிவோம் நம் பெருமை
Video 1
Video 2
Video 3
Video 4
Video 5
Video 6
வந்தவரைப் போற்றி
மொந்தை மதுவுண்டு
மந்தைகளாய் வாழாமல்
செந்தமிழன் பேரரசன்
இராச இராச சோழ மன்னன்
பெருமை கூறும் காணொளியில
கண்டறிவோம் நம் பெருமை
Video 1
Video 2
Video 3
Video 4
Video 5
Video 6
Thursday, January 07, 2010
கனவா காவியமா
கனவா காவியமா
கண் முன்னே விரிந்த தேசம்
கனவா கண்களே
புதிய கரிகாலன் ஆண்ட தேசம்
கனவல்லக் கண்களே
சோழப் புலிக் கொடிகள் பறந்த தேசம்
கனவா கண்களே
வீரப்புலிப் படைகள் கண்ட தேசம்
கனவல்லக் கண்களே
காந்தி கண்ட கனவுத் தேசம்
கனவே கண்களே
அக் கனவை நனவாக்கும் ஈழம்
கனவல்லக் கண்களே
இதைப் பார்த்துப் பார்த்துப் பூத்ததெல்லாம்
கனவா கண்களே
பொறா மனங் கொண்டோர் சூழ்ச்சியெல்லாம்
கனவல்லக் கண்களே
அற வழி பிறழ்ந்து அழித்தவர்கள்
கனவா கண்களே
அன்பு ஈழத்தை உடைத்தவர்கள்
கனவல்லக் கண்களே
நம் விண்ணுயர்ந்த எழுச்சி எல்லாம்
கனவா கண்களே
எம் கண் முன்னே கவிழ்ந்ததுவுங்
கனவல்லக் கண்களே
பெருங் காவியமே தோன்றியதும்
கனவா கண்களே
மறு சோழமாகி நின்ற ஈழம்
கனவல்லக் கண்களே
புறநானூறு புகட்டா வீரம்
கனவா கண்களே
புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே
புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே
Subscribe to:
Posts (Atom)

