Saturday, October 29, 2016

மகனின் பேச்சு

எமது மகன் புதிரன் பல்கலைக் கழகத்தில் தத்துவம் பயிலும் மாணவன்.
அவர் சாயிபாபா நிலையத்தில் ”உள் அமைதி” பற்றி ஆற்றும் ஆங்கில உரையின்  ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.

ஈன்ற பொழுது  பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோனெனக் கேட்ட தாய்


மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ்சொல்

Inner Peace - Bro Puthi Jey




Saturday, October 22, 2016

வாத்துப் பெயர்வு

வடக்காயும் தெற்காயும்
வரிசைகளால் கூம்பமைத்து
ஆண்டிற்கு இரண்டு தரம்
இடம்பெயரும் வாத்துகளே

தொலைநோக்குக் காலநிலைக்
கருவிகள்தாம் நீவீரோ

எதிர்காலம் கணித்துவிடும்
சாத்திரிமார் உம் உறவோ

முக்காலம் உணர்ந்திருந்த
முனிவர்களும் உம் உறவோ

எப்போதும் புலம் பெயரும்
அகதிகளும் உம் போலோ

எப்படித்தான் நீரறிவிர்
வரப்போகும் மாறுதலை

பறப்பதிலும் ஓர் அழகு
அதில் இருக்கும் நேர்த்தி
வியூகமாய்ப் பறப்பதிலும்
புதைந்திருக்கும் அறிவு

உம்மறிவு எமக்கிருந்தால்
பல அழிவு தவிர்த்திருப்போம்
அவரவர்க்கு அதுவதுவே
பகர்வது மா உண்மையே