Wednesday, May 04, 2005

சில பழமொழிகள்

பழமொழி சொல்லிப் பிள்ளை வளர்க்காத பெற்றோர் யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரையும் போலவே, எனது பெற்றோரும் அவ்வப்போது சொன்னவை இப்பொழுது உறைக்கின்றன. அவற்றில் சில உங்களுடன் பகிர்ந்து கொள்ள.

  • நம்ப நட, நம்பி நடவாதே

  • எல்லோர் நம்பிக்கையையும் நீ பெறும் படியாக நடந்து கொள். ஆனால் எல்லோரையும் நம்பி நடந்து அதனால் ஏமாந்து துன்பத்தைத் தேடிக் கொள்ளாதே

  • கட்டிலில் ஏற முன்னர் காலை ஆட்டாதே

  • இதையொத்த பல பழமொழிகள் உண்டு. அதாவது, கிடைக்க முன் அனுபவிக்க நினைக்காதே. கட்டிலில் ஏற முன் காலை ஆட்டினால் விழுந்து விடுவாயேயல்லாது, சொகுசாக இழைப்பாற முடியாது.

  • ஓடும் புளியம் பழமும் போல் இரு

  • எந்தவொரு விடயத்திலும் ஒட்டி ஊறி விடாதே. புளியம் பழமும் அதன் ஓடும் போல் ஒன்றாக இரு. ஆனால் ஒட்டி இராதே. அதிகம் ஒட்டினால் இழப்புக்களைத் தாங்குவது மகா கடினம்.

  • தோழனோடும் ஏழமை பேசேல்

  • எப்படிப்பட்ட தோழனாயினும், உனது ஏழ்மையையோ பலவீனங்களையோ பகிர்ந்து கொள்வது நல்லதல்ல.

2005-05-04

1 comment:

Anonymous said...

uh. informative text