கனவா காவியமா
கண் முன்னே விரிந்த தேசம்
கனவா கண்களே
புதிய கரிகாலன் ஆண்ட தேசம்
கனவல்லக் கண்களே
சோழப் புலிக் கொடிகள் பறந்த தேசம்
கனவா கண்களே
வீரப்புலிப் படைகள் கண்ட தேசம்
கனவல்லக் கண்களே
காந்தி கண்ட கனவுத் தேசம்
கனவே கண்களே
அக் கனவை நனவாக்கும் ஈழம்
கனவல்லக் கண்களே
இதைப் பார்த்துப் பார்த்துப் பூத்ததெல்லாம்
கனவா கண்களே
பொறா மனங் கொண்டோர் சூழ்ச்சியெல்லாம்
கனவல்லக் கண்களே
அற வழி பிறழ்ந்து அழித்தவர்கள்
கனவா கண்களே
அன்பு ஈழத்தை உடைத்தவர்கள்
கனவல்லக் கண்களே
நம் விண்ணுயர்ந்த எழுச்சி எல்லாம்
கனவா கண்களே
எம் கண் முன்னே கவிழ்ந்ததுவுங்
கனவல்லக் கண்களே
பெருங் காவியமே தோன்றியதும்
கனவா கண்களே
மறு சோழமாகி நின்ற ஈழம்
கனவல்லக் கண்களே
புறநானூறு புகட்டா வீரம்
கனவா கண்களே
புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே
புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே


0 கருத்துகள்:
Post a Comment