Thursday, January 07, 2010

கனவா காவியமா

 கனவா காவியமா

கண் முன்னே விரிந்த தேசம்
கனவா கண்களே - புதிய

கரிகாலன் ஆண்ட தேசம்
கனவல்லக் கண்களே - சோழப்

புலிக் கொடிகள் பறந்த தேசம்
கனவா கண்களே - வீரப்

புலிப் படைகள் கண்ட தேசம்
கனவல்லக் கண்களே

காந்தி கண்ட கனவுத் தேசம்
கனவே கண்களே - அக்

கனவை நனவாக்கும் ஈழம்
கனவல்லக் கண்களே - இதைப்

பார்த்துப் பூரித்த தெல்லாம்
கனவா கண்களே - பொறா

மனங் கொண்டோர் சூழ்ச்சியெல்லாம்
கனவல்லக் கண்களே - அற

வழி பிறழ்ந்து அழித்தவர்கள்
கனவா கண்களே - அன்பு

ஈழத்தை உடைத்தவர்கள்
கனவல்லக் கண்களே - நம்

விண்ணுயர்ந்த எழுச்சி எல்லாம்
கனவா கண்களே - எம்

கண் முன்னே கவிழ்ந்ததுவுங்
கனவல்லக் கண்களே

பெருங் காவியமே தோன்றியதும்
கனவா கண்களே

மறு சோழமாகி நின்ற ஈழம்
கனவல்லக் கண்களே

புறநானூறு புகட்டா வீரம்
கனவா கண்களே

புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே

No comments: