Monday, August 14, 2006

எப்படிப் பாடுவீரோ


தேவாலயந் தகர்ந்தது
செஞ்சோலை சிதறியது
சோலையின் தளிர்கள்
கருகின தீய்ந்தன
கயவர்தம் காட்டுக்
கடும்போக்கில்

ஐநாவே ஐயா நாட்டோரே
அனைத்துலகச் சட்டங்கள்
அழித்தோரைச் சாடாவோ
அல்லது
அழித்தவர் குருக்களோ

பாடுவீரோ சரணம்
பலியானது புலிகள் என்று

பாடுவீரோ பல்லவி
பக்கத்திற் சென்று பார்க்கப்
பாதுகாப்பு இல்லை என்று

பாடுவீரோ மங்களம்

பேசுவீர் பேசுவீர்
பேதங்கள் களைவீர்
பேசியதன் செயல்வடிவம்
பேய்வடிவில் பெறுவீர் என்று

பாடுவீரோ
எப்படிப் பாடுவீரோ


செயபால், 2006/08/14

2 comments:

Sivabalan said...

//செஞ்சோலையுஞ் சிதறியது இன்று
இளந்தளிர்கள் கருகின //

மிகவும் வேதனைக்கு உள்ளாக்கிய செய்தி.

Jeyapalan said...

என்ன ஒரு மிருகத்தனம்.
வரவுக்கு நன்றி.