Saturday, January 17, 2026

பாட்டு 51) கோயிலுக்குப் போனாயா

 கோயிலுக்குப் போனாயா

அமைதியற்ற நெஞ்சுக்கு

அதைத்தேடிக் கோயிலுக்கு

அமைதியாக வழிபடவே

ஆசையுடன் சென்றேனே


கோயிலுள்ளே பூசகராம்

இரைச்சலுடன் இறைவனிடம்

அறிந்திராத ஒலியெழுப்பி

அமைதியினைக் கலைத்துவிட்டு

அமளிதனை வழங்கினாரே


பேர் சொல்லி இறவனிடம்

அர்ச்சிக்கச் சீட்டெடுத்து

பவ்வியமாய் நிற்கையிலே

கோத்திரம் என்னவென்று

கேட்டொருவர் வருகையிலே

எனையறியா ஆண்டவனே

எனக்கு நீ அருளுவியோ


கண்ணை மூடி இறைவனிடம்

நீர் சொரிய வேண்டுகையில்

தன் கண்ணைச் சுழல விடும்

முகத்தை அண்மைப்படுத்துகின்ற

படக்கருவி இயக்கி நிற்கும்

படக்காரன் பார்வையில் நான்

அழுது கெஞ்சி ஆண்டவனை

வழிபடவும் வழியிலையே


தேடிச்சென்ற அமைதியினை

ஓட வைக்கும் அயலிருக்கும்

கோயிலுக்கு நானேனின்று

போகவில்லை என்று இன்னும்

சொல்லவோ நான் போபோபோ


No comments: