Saturday, January 17, 2026

பாட்டு 52) ஊரும் நீரும்

எங்கெங்கும் ஊரிருக்கும்

ஊர்களுக்கும் பேரிருக்கும்

ஊர்களிலே வாழ்விருக்கும்

பலவற்றைக் கண்டிருக்கும்


ஊர்களிலே நீரிருக்கும்

நீர் கொடுக்கக் கிணறிருக்கும்

கிணறின்றேல் குளமிருக்கும்

குளமின்றேல் ஆறிருக்கும்


ஊரினிலே வீடிருக்கும்

வீட்டோடு வளவிருக்கும்

வளவினிலே மரமிருக்கும்

கொடியிருக்கும் பூவிருக்கும்


நீராடிக் களித்திருப்பர்

நீரள்ளிக் குடித்திருப்பர்

நீரினிலே சமைத்திருப்பர்

நீர்பாய்ச்சிப் பயிர் வளர்ப்பர்


நீரற்றும் போயிருக்கும்

எல்லாமே காய்ந்திருக்கும்

ஊர்வளமே தேய்ந்திருக்கும்

மழை வந்து உயிர் கொடுக்கும்


No comments: