முகம் (சிறுவர் பாடல்)
கண்ணிரண்டு காதிரண்டு
கண்டு கேட்டு வாழ்வதற்கு
வாயொன்று மூக்கொன்று
உண்பதற்கும் மோப்பதற்கும்
நெற்றியொன்று நாடியொன்று
நல்ல கன்னந் தானிரண்டு
வாயினுள்ளே நாக்குமுண்டு
பற்களுமங் கேயுண்டு
மூக்கிலிரு துளைகளுண்டு
மூச்சுவிடும் வழிகளுண்டு
கண்ணில் மணி தானுண்டு
காண வைக்கப் பங்குண்டு
வெள்ளித் திரையுமங்குண்டு
வீழும் விம்பம் பாரென்று
காதில் குகைபோல் துளையுண்டு
துளையின் வழியே ஒலி சென்று
செவியின் பறையில் அதிர்ந்திட
இசையும் பேச்சும் கேட்டிடுமே
நெற்றி முதல் நாடி வரை
முகத்திலுள்ள உறுப்புகளை
அறிந்து பாட்டாய்ப் பாடிடுவோம்
பாடிப் பாடி மகிழ்ந்திடுவோம்
No comments:
Post a Comment