Tuesday, February 03, 2009
கலைஞரே காணும்
கலைஞரே காணும்
பொறுத்தது போதும்
பொறுத்தது போதும்
பொங்கியெழு மறத்தமிழா
பொறுத்தம னோகரனை
நொருக்கச் சொன்ன மு.க.
நீர் பொங்குவதெப்போ
பொறுப்பதே உம் பிழைப்போ
பொறுத்துப் பொறுத்துப்
பூத்த கண்ணால்
பூஞ்சிப் பார்த்தும்
புரியவில்லை
மு.க. நிலை - தி.
மு.க. நிலை
வெறுத்துப் போனோம்
வெல வெலத்துப் போனோம்
மு.க., தி.மு.க.
இன்று தமிழீழம்
நாளை தமிழகம்
என்று நிரல்
நீளும் போது
எங்கு போவீர்
என்ன செய்வீர்
மு.க. முழங்காத தமிழா
நாக்கால் வழங்காத பொருளா
கைப்புண்ணுக்குக் கண்ணாடியா
கலைஞருக்கே ஏடெழுதவா
காணும் ஐயா
ஓடலும் சாதலும்
காணும் ஐயா
தமிழன் மாய்தலை
காரும் ஐயா - உம்
பலம் கொண்டு
சேரும் ஐயா
பெருஞ் சிறப்புமக்கு
உம் கதவை நாமும்
உம் காதை ஊரும்
இன்னொரு முறை தேடாது
உம் புகழும் பெயரும்
உருக்குலைய முன்னே
உன்னி எழுந்து விடும்
உத்வேகம் பெற்று விடும்
உம்மால் முடியா விட்டால்
ஒதுங்கி வழி விடும் - உம்
இளைய தலைமுறையை
உசுப்பி அனுப்பிடும்
முன்னால் நின்று கொண்டு
தானும் செய்யான்
தள்ளியும் நில்லான்
என்றெல்லாம் தூற்றமுன்
செய்பவனைச் செய்ய விடும்
வெந்த புண்ணை ஆற விடும்
============================
காணும் = கண்டு கொள்ளும்
காணும் = போதும்
============================
பின்னூட்டச் செருகல்:
உம் மக்களுக்கு மந்திரி
பதவியில்லையா 'எந்திரி'
ஈழ மக்களுக்கு எவ்வொரு
நாதியில்லையா தந்திரி
நீ தந்தியடி தபாலடி
தமிழுலகம் தயாரடி
Subscribe to:
Posts (Atom)