Tuesday, December 20, 2011

அங்காடித் தெரு

திரைப்பட ஆய்வு செய்யத்
திராணி எனக்கில்லை
திரைக்கதை சாற்றும் உண்மை
திக்கற்றோர் துன்பலை

பல படங்கள் பார்த்து விட்டோம்
சில படங்கள் பதித்து விடும்
முத்திரை குத்தி
காஞ்சிவரம் அங்காடித்தெரு
பறித்ததோ நித்திரையை

நல்லதாய் ஒளிர்கிறது
வல்லரசாய் மிளிர்கிறது
வாய்கிழியக் கூவி விற்று
வக்கணையாய்ப் பதவி பெற்று
வந்ததெல்லாம் சுருட்டிக்கொண்டு
வண்ண வண்ண அரசுகளும்
வால்பிடிக்கும் அமைச்சுகளும்
வதைத்தெடுக்கும் ஊழியரும்
வலையமைப்பாய்த் தொடரும்
அநியாய அட்டூளியம்
அறுதியிட்டு நிற்கையேல்
அலைக்களியும் அப்பாவிச் சனம்

காவலரே கேவலமாய்க்
காசுக்கு வாய் பிளந்தால்
பாதகங்கள் செய்வோரைப்
பார்ப்பதுவும் யாரோ
பாவிகள் முறையீட்டைக்
கேட்பதுவும் யாரோ

உடனடியாய்த் தீர்வு தேட
இதுவொன்றும் மழையில்லை
தீர்வொன்றும் குடையுமில்லை

மனிதர்கள் மாறுவதும்
மனங்களை மாற்றுவதும்
மந்திரத்தால் நடந்துவிடா
மாற்றங்கள் தேவையென்றே
நற்குணங்கள் பிஞ்சிலேயே
போதிக்கத் தொடங்கிவிட்டால்
பாதி மக்கள் திருந்திடுவர்
நயமாக வாழ்ந்திடுவர்
-செயபால், மே 16, 2010

No comments: