வருவேன் ஐந்து மணிக்கு
என்று சொன்னாய் எனக்கு
வராத தேனோ அதற்கு
எதற்கு என்மேல் பிணக்கு
ஐந்தோ ஆறாகித் தொடர
கண்ணோர ஆறும் பெருக
எங்கே இருக்கிறாய் நீ
இங்கே இறக்கிறேன் நான்
சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை
சொன்னதைச் செய்யாது ஆண்பிள்ளை
வந்தினிச் சொல்லும் பல பொய்யை
வரா திருந்தாலும் பெருங் கவலை
Tuesday, January 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment