Sunday, May 24, 2020

காதல் யோகா

காதல் யோகா செய்யுங்காலை
காணுகின்ற சுகமோ கொள்ளை
தாகந் தீர்க்குந் தண்ணீர்போலே
போகந் தூர்க்கும் மருந்து வில்லை

முன்னைப் பொழுதில் உன்னை நானும்
எண்ணிப் பார்க்கும் போதே இன்பம்
உந்தன் பெயரை எழுதிப் பார்த்து
சிந்தை சிலிர்த்துக் கிறங்கி வீழும்

நானிருக்கும் இடங்களிலே நீயிருந்தால் துள்ளும்
அருகில் நீயும் நடந்து சென்றால்
இடித்து மாளும் இதயம்
இத்தனைக்கும் நீயாரோ நான் யாரோவன்றோ

சொல்லிவிட வேண்டும் அன்பை
நல்ல ஒரு நாளில்
எள்ளி நீயும் நகைத்து விட்டால்
கொள்ளியன்றோ என்னில்

காத்திருந்து பூத்தன என் கண்கள் இரண்டும்
கனிந்தது ஓர்நாளில் என் காதல் வசந்தம்
கைக்கு வந்த காதலினால் பேரானந்தம்
வாழ்க்கையிலே முக்கிய மான அங்கம்

செயபாலன்  2020 மே 22

No comments: