காசு பணம் தேடிச் சென்றோம்
கோடி சுகம் நாடிச் சென்றோம்
ஓடி ஒளிந்தே பறந்தோம்
தாயகத்தையே துறந்தோம்
பட்டழிந்தோம் கெட்டழிந்தோம்
பட்டி தொட்டி எங்கும் சென்றோம்
கட்டுக் காவல் கலைந்த நாட்டில்
தட்டி பிரித்தே நுழைந்தார்
காடு பறி போனதண்ணே - சுடு
காடும் பறி போனதண்ணே
வீடு பறி போனதண்ணே -அட
நாடே பறி போனதண்ணே
ஏர் உழுத ஈர நிலம்
ஏழை மக்கள் பாச நிலம்
கார் சூழ்ந்த கானகங்கள்
வேரோடே போனதண்ணே
மிச்ச சொச்ச சொந்தமெல்லாம்
பச்சைப் புழுவாய்த் துடித்தார்
பட்டி கட்டிக் கமஞ் செய்தார்
பட்டிக்குள் அடை பட்டார்
குஞ்சு குரால் பிஞ்செல்லாம்
பஞ்சையாய்ப் போனதண்ணே
கஞ்சிக்கே காவடியாம்
வஞ்சிக்கப் பட்டோமண்ணே
வஞ்சகர்கள் காலமெல்லாம்
பஞ்சாய்ப் பறக்குமண்ணே
பொன்விளையும் புஞ்சை எல்லாம்
வந்தமருங் கையிலோர் நாள்
Friday, January 29, 2010
Tuesday, January 19, 2010
முதற் கவிதை
வருவேன் ஐந்து மணிக்கு
என்று சொன்னாய் எனக்கு
வராத தேனோ அதற்கு
எதற்கு என்மேல் பிணக்கு
ஐந்தோ ஆறாகித் தொடர
கண்ணோர ஆறும் பெருக
எங்கே இருக்கிறாய் நீ
இங்கே இறக்கிறேன் நான்
சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை
சொன்னதைச் செய்யாது ஆண்பிள்ளை
வந்தினிச் சொல்லும் பல பொய்யை
வரா திருந்தாலும் பெருங் கவலை
என்று சொன்னாய் எனக்கு
வராத தேனோ அதற்கு
எதற்கு என்மேல் பிணக்கு
ஐந்தோ ஆறாகித் தொடர
கண்ணோர ஆறும் பெருக
எங்கே இருக்கிறாய் நீ
இங்கே இறக்கிறேன் நான்
சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை
சொன்னதைச் செய்யாது ஆண்பிள்ளை
வந்தினிச் சொல்லும் பல பொய்யை
வரா திருந்தாலும் பெருங் கவலை
Friday, January 08, 2010
Thursday, January 07, 2010
கனவா காவியமா
கனவா காவியமா
கண் முன்னே விரிந்த தேசம்
கனவா கண்களே - புதிய
கரிகாலன் ஆண்ட தேசம்
கரிகாலன் ஆண்ட தேசம்
கனவல்லக் கண்களே - சோழப்
புலிக் கொடிகள் பறந்த தேசம்
புலிக் கொடிகள் பறந்த தேசம்
கனவா கண்களே - வீரப்
புலிப் படைகள் கண்ட தேசம்
புலிப் படைகள் கண்ட தேசம்
கனவல்லக் கண்களே
காந்தி கண்ட கனவுத் தேசம்
கனவே கண்களே - அக்
கனவை நனவாக்கும் ஈழம்
கனவை நனவாக்கும் ஈழம்
கனவல்லக் கண்களே - இதைப்
பார்த்துப் பூரித்த தெல்லாம்
பார்த்துப் பூரித்த தெல்லாம்
கனவா கண்களே - பொறா
மனங் கொண்டோர் சூழ்ச்சியெல்லாம்
மனங் கொண்டோர் சூழ்ச்சியெல்லாம்
கனவல்லக் கண்களே - அற
வழி பிறழ்ந்து அழித்தவர்கள்
வழி பிறழ்ந்து அழித்தவர்கள்
கனவா கண்களே - அன்பு
ஈழத்தை உடைத்தவர்கள்
ஈழத்தை உடைத்தவர்கள்
கனவல்லக் கண்களே - நம்
விண்ணுயர்ந்த எழுச்சி எல்லாம்
விண்ணுயர்ந்த எழுச்சி எல்லாம்
கனவா கண்களே - எம்
கண் முன்னே கவிழ்ந்ததுவுங்
கண் முன்னே கவிழ்ந்ததுவுங்
கனவல்லக் கண்களே
பெருங் காவியமே தோன்றியதும்
கனவா கண்களே
மறு சோழமாகி நின்ற ஈழம்
கனவல்லக் கண்களே
புறநானூறு புகட்டா வீரம்
கனவா கண்களே
புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே
புதுப் பொலிவோடினி எழும் ஈழம்
கனவல்லக் கண்களே
Subscribe to:
Posts (Atom)