Saturday, January 17, 2026

ஆறு அறிவு

தன் மையப்படுத்திச் சிந்திக்கும் மனிதர்களால் பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் ஓரறிவு முதல் ஆறறிவு வரை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.


ஆறறிவுள்ள மனிதனால், ஐந்தறிவு விலங்குகளினதோ அல்லது அதைவிடக் குறைந்த அறிவுள்ள உயிரினங்களின் தகவல் பரிமாற்றத்தை இதுவரை பகுத்தறிய முடியவில்லை. ஆனால் அந்த உயிரினங்கள், மனிதனின் தகவல் தொடர்பாடலைப் புரிந்து வைத்துள்ளதை நாம் பல இடங்களில் காண்கிறோம்.


பேசும் ஆற்றல் கொண்ட கிளி, மைனா ஆகிய பறவைகள் மனிதரின் மொழியை தெரிந்து கொண்டு பேசுகின்றனவே. மனிதரால் மிருகங்களின் ஒரு ஒலியையாவது சரியாகத் தொடர்பாடலில் உபயோகிக்க முடிகிறதா?


நாய்களில், பல வகை நாய்கள், பல்வேறு தேவைகளுக்கு மனிதரால் பயிற்றுவிக்கப்பட்டு பல செயற்கரிய வேலைகளை அவை செய்கின்றனவே.

இந்த நாய்கள் மனிதரின் கட்டளைகளை மிகவும் துல்லியமாகப் புரிந்து கொண்டு தம் பயிற்சித் துறையில் சிறந்து விளங்குகின்றனவே. என்ன வியப்பு!


இதே போல், வேறு விலங்குகளும் பயிற்றப்பட்டு சில சில வேலைகளுக்குப் பயன்படுகின்றன. மேலும், டொல்பின் போன்ற உயிரினங்கள் பயிற்றப்படாமலே சில வியத்தகு செயல்களைச் செய்திருப்பதைச் செய்திகளில் பல தடவை கேள்விப்பட்டிருகிறோம்.


இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது, ஆறறிவுள்ள மனிதரா அல்லது ஆறிலும் குறைந்த அறிவுள்ளவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினங்களா அறிவிற் சிறந்தவை என்ற வினா எழுகிறதே.


ஆறறிவும் ஏழறிவும் மனைதனின் பார்வையிலே தான். மனிதனாக இலாமல் மாற்றி யோசித்தால் அறிவும் திறனும் நன்கு புலப்படும்.


மீண்டும் கூறுவதானால, தன்னை மையப்படுத்திச் சிந்திக்கும் மனிதர்க்குத் தாமே சிறந்தவரென்றும் மற்றவை தம்மை விட அறிவு குறைந்தவையே என்ற எண்ணம் தலை தூக்கியிருப்பதில் வியப்பொன்றுமில்லையே.


No comments: