Wednesday, July 26, 2006

இந்தப் பைத்தியக் காரத்தனம் அரசியலரங்கில் மிகவும் அதிகமாகக் காணப்படும் ஒரு சரக்கு. பல நாடுகளில், பல காலமாகப் பாவனையில் இருக்கும் ஒரு தந்திரம். அரசியல் அனர்த்தங்கள், படுகொலைகள், சதி வேலைகள் நடைபெறும் போது உதவிக்கு வருவது இந்தப் பைத்திய மருந்து. அரசியல் சதிகாரர்கள், கொலைகாரர்கள், பாதகர்கள் மாட்டிக் கொள்ளும் போது அவர்கள் சார்புடைய அரசுகள் பதிவியிலிருக்கும் போது அந்த அரசுகள் அவர்களைப் பாதுகாக்கத் தவறுவதில்லை. அதற்கு அவர்கள் பாவிக்கும் அரச தந்திரந் தான் பைத்தியக் காரப் பட்டம்.

சமீபத்திய உதாரணங்களாகக் கொள்ளக் கூடியவை சில. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்றவரைப் பைத்தியம் என்று கூறி விடுதலை செய்யப் பட்டது ஒன்று. அண்மையில் யாழ்நகரில் நீதிபதியின் வாகனத்தைப் பின்தொடர்ந்து தாக்க முற்பட்ட சம்பவத்தில் கைதானோருக்கும் பைத்திய வைத்தியம் பார்க்கும் படலம் ஆரம்பமாகிறது. இப்படிப் பல.

இங்கே நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், பைத்தியம் யாருக்கு என்பது தான். பைத்தியக் காரரை வேலைக்கு வைத்திருப்பவர்களா? அல்லது வேலைக்கு வைத்திருப்பவர்களுக்கும் பைத்தியமா? அல்லது அவர்களையெல்லாம் பதவிக்கு அனுப்பி வைக்கிறோமே எங்களுக்குப் பைத்தியமா?

என்னவோ ஏதோ இந்தப் பைத்தியக்காரப் பதவியால் பலரின் காட்டில் மழை.

No comments: