Monday, May 22, 2017

மழை

மழை

கூரையில் விழும் துளியோசை
கூரையை அலைக்கும் காற்றோசை
இடையிடை இடிக்கும் இடியோசை
இவற்றைக் கொண்டே அறிவோமே
எத்துணை மழை பெய்யுதென்று

கூரையால் வடிந்த மழைநீர்
மண்ணில் போட்ட கோலங்கள்
சாலச் சொல்லுமே பெய்த மழையின்
வீச்சும் அளவும் எத்துணையென்று

மழையின் போது புவியில் தோன்றும்
சின்னச் சின்னக் குட்டைகளில்
வீழும் மழைத் துளி
போடும் வட்டமும் பொங்கும் துளியும்
வடிவாய்ச் சொல்லும்
மழையின் கனதி

அத்தனையும் தரும்
மழையின் அளவும்
மனதைக் கவரும்
மழையின் அழகும்
நினைவில் நீங்கா
ஓவியமாமே

No comments: