Friday, January 03, 2020

வந்தாரை வாழ வைக்கும் நம்மூர்

வந்தாரை வாழ வைக்கும் நம்மூர்


தமிழகம், வந்தாரை வாழ வைக்கும் இடமென்று அம் மக்கள் அடிக்கடி பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். இதை உற்று நோக்கி நம் ஈழநாட்டின் நிலையையும் யோசித்து எம்மிடையே ஈழநாட்டவராக வாழ்ந்த பலரைப் பற்றி எண்ணிய போது நமக்கும் வந்தாரை வாழவைக்கும் பண்பிருப்பதை உணர முடிந்தது.

கோவில்களில் பூசைசெய்ய வரவழைக்கப்பட்டவர்கள், வியாபார நோக்கில் வந்தவர்கள், கலைகளைக் கற்பிக்க வந்தவர்கள் என பலதரப்பட்டவர்கள் தமிழரோடு தமிழ் பேசி வாழ்ந்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க, கேரளா போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள் சிங்களவரோடு சேர்ந்து வாழ்ந்தும் வருகிறார்கள்.
ஆகவே இலங்கையும் வந்தாரை வாழவைக்கும் ஒரு இடம் தான்.

No comments: