என்னைப் போற்றிக்
கவி பாடக்
கேட்டார் நண்பர்
என்னிடமே
என்னைப் பற்றி
எழுதக் கூடும்
போற்றி எழுத
எப்படி முடியும்
உமது திறன்கள்
உமக்குத் தெரியும்
கவிதை எழுத்தும்
உம்மால் முடியும்
எழுதித் தாரும்
விரைவாய் நீரும்
என்னில் எனக்குத்
தெரிவ தெல்லாம்
குற்றங் குறைகள்
மட்டுந் தான்
அவற்றை எழுத்தில்
வடித்தாலோ
அவமா னந்தான்
வரவாகும்
போற்றப் படவே
நானொன்றும்
போதனை சொன்ன
புத்தனில்லை
போதியில் ஞானம்
கிட்டவில்லை
இதெல்லாம் உமக்கு
வீண்வேலை
விரைந்து நீரும்
சென்றிடுவீர்
No comments:
Post a Comment