Saturday, March 05, 2016

போற்றிக் கவி

என்னைப் போற்றிக்
கவி பாடக் 
கேட்டார் நண்பர்
என்னிடமே

என்னைப் பற்றி
எழுதக் கூடும்
போற்றி எழுத
எப்படி முடியும்

உமது திறன்கள்
உமக்குத் தெரியும்
கவிதை எழுத்தும்
உம்மால் முடியும்
எழுதித் தாரும்
விரைவாய் நீரும்

என்னில் எனக்குத்
தெரிவ தெல்லாம்
குற்றங் குறைகள்
மட்டுந் தான்

அவற்றை எழுத்தில்
வடித்தாலோ
அவமா னந்தான்
வரவாகும்

போற்றப் படவே
நானொன்றும்
போதனை சொன்ன
புத்தனில்லை
போதியில் ஞானம்
கிட்டவில்லை

இதெல்லாம் உமக்கு
வீண்வேலை
விரைந்து நீரும்

சென்றிடுவீர்

No comments: