Saturday, October 22, 2016

வாத்துப் பெயர்வு

வடக்காயும் தெற்காயும்
வரிசைகளால் கூம்பமைத்து
ஆண்டிற்கு இரண்டு தரம்
இடம்பெயரும் வாத்துகளே

தொலைநோக்குக் காலநிலைக்
கருவிகள்தாம் நீவீரோ

எதிர்காலம் கணித்துவிடும்
சாத்திரிமார் உம் உறவோ

முக்காலம் உணர்ந்திருந்த
முனிவர்களும் உம் உறவோ

எப்போதும் புலம் பெயரும்
அகதிகளும் உம் போலோ

எப்படித்தான் நீரறிவிர்
வரப்போகும் மாறுதலை

பறப்பதிலும் ஓர் அழகு
அதில் இருக்கும் நேர்த்தி
வியூகமாய்ப் பறப்பதிலும்
புதைந்திருக்கும் அறிவு

உம்மறிவு எமக்கிருந்தால்
பல அழிவு தவிர்த்திருப்போம்
அவரவர்க்கு அதுவதுவே
பகர்வது மா உண்மையே



1 comment:

Anonymous said...

Wow