Wednesday, May 03, 2006

ஈழத் தமிழர் இந்தியாவை விரோதியாகக் கருதுகிறார்களா?

ஒரு வலைப்பூத் தளத்தில் இது பற்றி எழுதியிருந்தார்கள். அதாவது, ஈழத் தமிழர் ஏன் இந்தியாவை எதிரியாகப் பார்க்கிறார்கள் என்று. அது தவறு, ஈழத் தமிழர் எப்போதும் இந்தியாவின் நண்பராகவும் கூட்டு நாடாகவும் இருக்கவே என்றும் விரும்புகிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தி மறுமொழி எழுதியிருந்தேன். அது சரியாகச் சென்றடையவில்லை. அதனால் அதை இங்கே இடுகிறேன்.

ஒரு ஈழத்தவன் என்ற ரீதியில் என் கருத்துக்கள், யார் விரோதி?

1. இந்தியா-பாக். யுத்தத்தின் போது பாக். விமானங்களுக்கு இறங்கு தள வசதி செய்தது அன்றைய சிங்கள அரசு.
2. அண்ணாத்துரை இறந்தபோது அவரின் இறுதிக்கிரியைகளின் ஒலிபரப்பை நேரடி அஞ்சல் செய்தது இலங்கைத் தமிழ் வானொலி.
3. இந்திரா அன்னையார் இறந்த போது, எங்கள் தாயே இறந்து விட்டது போல் துக்கம் அனுஷ்டித்தது ஈழத் தமிழர் மட்டுமே. சிங்களவர் பட்டாசு கொளுத்திக் கொண்டாடியது வேறு.
4.அமைதி படை 87ல் வந்த போது அன்போடு வரவேற்றது ஈழத்தமிழர். அதே நேரத்தில் கொழும்பில் சிங்களச் சிப்பாயால் ராஜீவ் தாக்கப் பட்டது, நட்பினால்!
5. அ.ப. அட்டூளியங்கள் தொடங்கிய போது, சண்டை தொடங்க முதல் இரண்டு பேர் உண்ணாவிரதம் இருந்து இறந்தது பாச மிகு இந்தியாவைப் பகைக்க விரும்பாமல் தான். சண்டை திணிக்கப் பட்ட போது வேறு வழி???
5. சிங்களவரின் இந்திய எதிர்ப்புப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். அது இங்கே தேவையற்றறது

No comments: