கர்நாடக சங்கீதம் எங்களில் பலருக்குப் பிடிப்பதில்லை. பிடிக்காமல் போனதற்குக் காரணம், எழுபதுகளில் பல பாடகர்கள் இலங்கை வானொலியில், ஒரு குறிப்பிட்ட சேவையில், "தரி னி னினி னானா னானா" என்று இழுத்துக் கொண்டே போய் எப்ப முடிப்பார்கள் என்று தெரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருப்பார்கள். இதனால் தொடங்கிய சில வினாடிகளிலேயே
வானொலியை நிற்பாட்டி விட்டு அப்பால் போய் விடுவோம், அதன் பின் எப்படிச் சங்கீதம் எங்களுக்குப் பிடிக்கும்?
புலம் பெயர்ந்த பின், சில கச்சேரிப் பக்கம் சென்று எட்டிப் பார்த்தால் அங்கே புரியாத மொழியில் புரட்டி எடுப்பார்கள், அது எப்படி எங்களுக்கு ஏறும். வழக்கம் போல் ஈழத்து பாடல்களும், தமிழ்த் திரைப் பாட்டுகளும், பக்திப் பாடல்களும் தான் எங்கள் இசை உலகம்.
இப்படி நிலைமை இருக்கையில், அண்மைக் காலங்களில் சில நல்ல கர்நாடக சங்கீத வித்துவான்கள், தமிழில் பல பாடல்களைப் பாடி அசத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நித்தியசிறீ மகாதேவன்,
சுதா ரகுநாதன்,
ஓ.எஸ். அருண்
என்று பலர் மிக நன்றாகப் பாடி என்னைப் போன்றவர்களைக் கவரத் தொடங்கியுள்ளார்கள். இவர்களின் பாடல்களால் ஈர்க்கப் பட்ட நேரத்தில் அருணா சாயிராம் என்று ஒரு பாடகர் இசை உலகையே கலக்கிக் கொண்டிருப்பது அறிந்து அவர் பாடல்களைக் கேட்டால், அவை எல்லோரையும் அசத்தி அசையாது இருந்து இரசிக்க வைத்திருக்கின்றன.
இந்த அரிய சேவையைப் பலர் YouTube மூலம் உலக இரசிகர்களோடு பகிர்ந்து கொண்டிருப்பது ஒரு பாராட்டப் பட வேண்டிய விடயம்.
இதோ இங்கே அவரின் சில பாடல்கள் கேட்டுப் பாருங்கள்.
Tuesday, May 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
signed to your rss
Post a Comment