===============
தேன்கூடு வைக்குதொரு போட்டி
தலைப்பைப் பாரதொரு ஈட்டி
மரணம் பற்றிநீ யெழுது
தோற்றால் வராது தீது
மரண தண்டனையுந் தராது
மகனே நிறுத்து
மரண தண்டனையா
மீண்டும் சொல்லையா
மரணம் தண்டனையா
மண்ணுலகில் மாந்தர்தம்
மண்ணாளுஞ் சட்டங்களில்
கண்ணாம்பூச்சி காட்டுகிறார்
குற்றம் புரிந்தோர்க்கு
அதியுச்சத் தண்டனையாம்
மரணம் தண்டனையாம்
மரணம் தண்டனையா
யாருக்குத் தண்டனை
தவறு செய்தோர்க்கா
அவனைச் சார்ந்தோர்க்கா
அளிக்குஞ் சான்றோர்க்கா
சாகடிக்குஞ் சேவகர்க்கா
மரணம் தண்டனையா
மனிதம் தப்பிழைக்கிறதா
ஜெயபால், 2006/07/06
2 comments:
///
மரணம் தண்டனையா
யாருக்குத் தண்டனை
தவறு செய்தோர்க்கா
அவனைச் சார்ந்தோர்க்கா
அளிக்குஞ் சான்றோர்க்கா
சாகடிக்குஞ் சேவகர்க்கா
///
நல்லா இருக்குங்க இது....
நன்றி குமரன்.
Post a Comment