திரைப்பட ஆய்வு செய்யத்
திராணி எனக்கில்லை
திரைக்கதை சாற்றும் உண்மை
திக்கற்றோர் துன்பலை
பல படங்கள் பார்த்து விட்டோம்
சில படங்கள் பதித்து விடும்
முத்திரை குத்தி
காஞ்சிவரம் அங்காடித்தெரு
பறித்ததோ நித்திரையை
நல்லதாய் ஒளிர்கிறது
வல்லரசாய் மிளிர்கிறது
வாய்கிழியக் கூவி விற்று
வக்கணையாய்ப் பதவி பெற்று
வந்ததெல்லாம் சுருட்டிக்கொண்டு
வண்ண வண்ண அரசுகளும்
வால்பிடிக்கும் அமைச்சுகளும்
வதைத்தெடுக்கும் ஊழியரும்
வலையமைப்பாய்த் தொடரும்
அநியாய அட்டூளியம்
அறுதியிட்டு நிற்கையேல்
அலைக்களியும் அப்பாவிச் சனம்
காவலரே கேவலமாய்க்
காசுக்கு வாய் பிளந்தால்
பாதகங்கள் செய்வோரைப்
பார்ப்பதுவும் யாரோ
பாவிகள் முறையீட்டைக்
கேட்பதுவும் யாரோ
உடனடியாய்த் தீர்வு தேட
இதுவொன்றும் மழையில்லை
தீர்வொன்றும் குடையுமில்லை
மனிதர்கள் மாறுவதும்
மனங்களை மாற்றுவதும்
மந்திரத்தால் நடந்துவிடா
மாற்றங்கள் தேவையென்றே
நற்குணங்கள் பிஞ்சிலேயே
போதிக்கத் தொடங்கிவிட்டால்
பாதி மக்கள் திருந்திடுவர்
நயமாக வாழ்ந்திடுவர்
திராணி எனக்கில்லை
திரைக்கதை சாற்றும் உண்மை
திக்கற்றோர் துன்பலை
பல படங்கள் பார்த்து விட்டோம்
சில படங்கள் பதித்து விடும்
முத்திரை குத்தி
காஞ்சிவரம் அங்காடித்தெரு
பறித்ததோ நித்திரையை
நல்லதாய் ஒளிர்கிறது
வல்லரசாய் மிளிர்கிறது
வாய்கிழியக் கூவி விற்று
வக்கணையாய்ப் பதவி பெற்று
வந்ததெல்லாம் சுருட்டிக்கொண்டு
வண்ண வண்ண அரசுகளும்
வால்பிடிக்கும் அமைச்சுகளும்
வதைத்தெடுக்கும் ஊழியரும்
வலையமைப்பாய்த் தொடரும்
அநியாய அட்டூளியம்
அறுதியிட்டு நிற்கையேல்
அலைக்களியும் அப்பாவிச் சனம்
காவலரே கேவலமாய்க்
காசுக்கு வாய் பிளந்தால்
பாதகங்கள் செய்வோரைப்
பார்ப்பதுவும் யாரோ
பாவிகள் முறையீட்டைக்
கேட்பதுவும் யாரோ
உடனடியாய்த் தீர்வு தேட
இதுவொன்றும் மழையில்லை
தீர்வொன்றும் குடையுமில்லை
மனிதர்கள் மாறுவதும்
மனங்களை மாற்றுவதும்
மந்திரத்தால் நடந்துவிடா
மாற்றங்கள் தேவையென்றே
நற்குணங்கள் பிஞ்சிலேயே
போதிக்கத் தொடங்கிவிட்டால்
பாதி மக்கள் திருந்திடுவர்
நயமாக வாழ்ந்திடுவர்
-செயபால், மே 16, 2010
No comments:
Post a Comment