பண்பாடு பத்து
எம்முன்னோர் பகுத்து வைத்தார்
பண்பாடு பத்தென்றார்
(எம் முன்னோர்)
நட்பை நயமாய்ப் பேணச் சொன்னார்
வாய்மையைக் கடைப்பிடிக்கச் சொன்னார்
(எம் முன்னோர்)
அன்பின் பெருமை அறியச் சொன்னார்
மானம் பெரிதென வாழச் சொன்னார்
(எம் முன்னோர்)
வீரமே மூச்சாய் வேணு மென்றார்
கலைகளில் மூழ்கிக் களிக்கச் சொன்னார்
(எம் முன்னோர்)
அறம் தவறாமல் வாழச் சொன்னார்
பக்தி நெறி நெஞ்சில் பதிக்கச் சொன்னார்
(எம் முன்னோர்)
விருந்தோம்பி வாழும் வழி சொன்னார்
ஒழுக்கத்தின் உயர்வு ஓதிச் சொன்னார்
(எம் முன்னோர்)
1 comment:
Tamilmanam +1
Post a Comment